ஆயுதம்ஃ

சுரதா யாழ்வாணன்

Monday, January 28, 2008

எழுத்தாளர் செ.யோகநாதன் காலமானார்



பிரபல எழுத்தாளர் செ.யோகநாதன் காலமானார்
ஈழத்தின் சிறந்த படைப்பாளிகளில் ஒரு வரான செ.யோகநாதன் தமது 66 ஆவது வயதில் நேற்றுக் காலமானார். இவர் தமிழ கத்திலும் நன்கு அறியப் பட்டவர்.
""கலைச்செல்வி'' பண்ணையில் வளர்ந்த இவர் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் 19601964 களில் முகிழ்த்த சிறுகதை எழுத்தாளர் குழு மத்தில் ஒருவர். பின்னர் தமிழக பத்திரி கைகளிலும் நிறைய எழுதியுள்ளார்.
இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி அவர் பல்கலைக் கழகத்தில் பயின்று கொண்டிருந்த வேளையிலேயே வெளி வந்துவிட்டது.அதன் பின்னர் ""கண்ணீர் விட்டே வளர்த்தோம்'' உட்பட தமது சிறுகதைத் தொகுதிகள் சிலவற்றை வெளியிட்டார். தமது குறுநாவல்களையும் மூன்று தொகுதிகளாக வெளியிட்டிருந்தார்.
தமிழகத்தில் வாழ்ந்த காலத்தில் ஈழத்து எழுத்தாளர்களின் சிறுகதைகளை இரண்டு தொகுதிகளாக வெளியிட்டு அவர்களை தமிழக வாசகர்களுக்கு அறிமு கப்படுத்தியவர்.
இவரது படைப்புக்களுக்கு இலங் கையில் மட்டுமன்றி தமிழகத்திலும் பரி சில்களும்,விருதுகளும் கிடைத்தன.
குழந்தை இலக்கியத்திலும் அதிக ஈடுபாடு காட்டிய செ.யோ அத்துறையில் பல நூல்களை எழுதியதுடன் மூன்று சிறுவர் சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் விளங் கினார்.
திரைப்படத்துறையிலும் ஈடுபாடு கொண்ட இவர் இணை இயக்குநராகவும் செயற்பட்டார்.
கொழும்புத்துறையைப் பிறப்பிட மாகக் கொண்ட இவர் உதவி அரசாங்க அதிபராகவும் பணியாற்றியிருந்தார். (அ)

யோகநாதன் பற்றிய மேலதிக விபரங்கள்

http://uthayan.com

மேலதிக விபரம் குடும்ப தொடர்பு விபரத்துடன் இணைத்துள்ளேன்.


செல்லையா யோகநாதன்

(முன்னால் உதவி அரச அதிபர்பிரபல எழுத்தாளர்)
கொழும்புத்துறையை பிறப்பிடமாகவும், நல்லூரை வதிவிட மாக வும் கொண்ட செல்லையா யோகநாதன் நேற்று (28.01.2008) திங்கட் கிழமை காலமானார்.
அன்னார் செல்லையா தம்பதியினரின் அன்பு மகனும், சிவராமலிங்கம் தம்பதியினரின் மருமகனும், சுந்தரலட்சுமி யின் அன்புக் கணவரும், Dr.சத்யன்(U.k), Dr. ஜெயபாரதி (கொழும்பு) ஆகியோரின் அன்பத்தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் நாளை (30.01.2008) புதன் கிழமை நடைபெற்று பூதவுடல் முற்பகல் 10 மணிக்குத் தகனக்கிரியைக்காக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும்.
Information:
தகவல்:
குடும்பத்தினர்.
4/4,மூத்த விநாயகர் முதலாம் ஓழுங்கை,
கச்சேரி நல்லூர் வீதி, யாழ்ப்பாணம்.
TP.021 222 7021

http://www.uthayanweb.com/Death_Notice_View.php?d=OB08012903